இந்த தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் தோனி விளையாடுவாரா ? மாட்டாரா ? – அவரே கூறிய பதில் இதோ

Dhoni-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.

cskvsmi

- Advertisement -

சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

ishan kishan

மும்பை அணிக்கு எதிராக அடைந்த இந்த மோசமான தோல்வி ரசிகர்களை மட்டுமின்றி சிஎஸ்கே நிர்வாகத்தையும் கலங்க வைத்துள்ளது. 11 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 தோல்விகளை அடைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் உள்ள மீது மூன்று போட்டிகளில் தோனி விளையாடுவாரா ? அல்லது வேறு யாராவது அணியை வழி நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் கட்டாயத்தில் தற்போது சிஎஸ்கே உள்ளது அதனால் மீதமுள்ள எஞ்சிய மூன்று போட்டிகளில் விளையாடுவது குறித்து தோனியே நேற்றைய போட்டி முடிந்து தகவலை வெளியிட்டார். அதில் அதுகுறித்து அவர் கூறுகையில் :

ஒரு கேப்டனாக என்னால் எங்கும் ஓடி ஒளிய முடியாது. எனவே அடுத்து நடைபெற இருக்கும் மூன்று போட்டிகளிலும் நிச்சயம் நான் விளையாடுவேன் என்றும் அதிலிருந்து சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்களை திறமையை கண்டறிய இருப்பதாகவும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement