MS Dhoni : இதுவே சி.எஸ்.கே அணியின் வெற்றியின் ரகசியம். – தல தோனி பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமை

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

Dhoni 2

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களை குவித்தார், வார்னர் 57 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் ஆடிய சென்னை அணி துவக்க வீரரான வாட்சன் அதிரடி மூலம் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். ரெய்னா 38 ரன்களை அடித்தார். வாட்சன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Watson2

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தோனி கூறியதாவது : ஒருசில போட்டிகளில் ஒருவர் நின்று போட்டியை வெற்றி பெற்று தருவார்கள். அந்த வகையில் இன்று வாட்சன் ஒருவர் நின்று வெற்றியை தேடித்தந்தார். வலைப்பயிற்சியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அணி நிர்வாகம் அவருக்கு நிறைய போட்களில் விளையாட வாய்ப்பு கொடுக்கிறது அவரும் அந்த போட்டிகளில் அணியும் வெற்றி பெறுகிறது அவரும் சிறப்பாக ஆடுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் தனியாக சிறப்பாக ஆடுவது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.

எங்களது பவுலிங் சிறப்பாக உள்ளது. பேட்டிங் இன்னும் கொஞ்சம் போக்கை மாற்றவேண்டி உள்ளது பேட்டிங் போக்கை மாற்றினால் தான் நாங்கள் பிளே ஆப் போட்டியில் சிறப்பாக ஆட முடியும். ஆனால், அதனை வெளிப்படையாக கூறமாட்டேன். ஏனெனில் அதுவே சி.எஸ்.கே அணியின் வெற்றி மந்திரம் அதனை நான் கூறிவிட்டால் அடுத்தமுறை ஐ.பி.எல் ஏலத்தில் யாரும் என்னை எடுக்க மாட்டார்கள். அதனால் இதனை நான் ஓய்வு பெரும் வரை அந்த ரகசியத்தை சொல்லமாட்டேன். சென்னை ரசிகர்களின் சப்போர்ட் மற்றும் அணி நிர்வாகம் சப்போர்ட் சென்னையில் எப்போதும் மிக அருமையாக இருக்கும் இதுவும் வெற்றிக்கு ஒரு காரணம் என்று தோனி கூறினார்.

Advertisement