MS Dhoni : தோனிக்கு பதிலாக அடுத்த போட்டியில் இவரே ஆடுகிறார் – சி.எஸ்.கே அறிவிப்பு

சென்னையில் நடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்ப

Dhoni-1
- Advertisement -

சென்னையில் நடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது தோனி மற்றும் ஜடேஜா காய்ச்சலால் போட்டியில் ஆடாதது மற்றும் டுப்ளிஸிஸ் போட்டியில் விளையாடாதது என மும்பை அணி எளிதாக சென்னை அணியை வீழ்த்தியது.

Dhoni

- Advertisement -

கடந்த போட்டியில் தோனி மற்றும் ஜடேஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தற்காலிக கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறினார். இந்நிலையில் தற்போது தோனி மற்றும் ஜடேஜாவின் உடல்நிலை பரிசோதனைக்கு பிறகு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தோனி இன்னும் காய்ச்சலில் இருந்து விடுபடவில்லை, முதுகுவலியிலும் இருந்து வலியும் நீங்கவில்லை.

ஜடேஜா காய்ச்சலில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பினார். அதனால் நாளை நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இவர் பங்கேற்பார் என்று தெரிகிறது. ஆனால், தோனி இன்னும் முழுமையாக குணமாகாததால் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தோனிக்கு பதிலாக நாளை தமிழக வீரர் ஜெகதீசன் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jagadeesan

நாளை இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கான டிக்கெட் நேற்றே விற்று தீர்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement