MS Dhoni : காலையே தூக்க கூடாதா ? இதுபோன்ற மின்னல் வேக ஸ்டம்பிங்கை பார்த்ததே இல்லை – ஐயர் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Dhoni
- Advertisement -

நேற்றைய போட்டியில் தோனி போட்டி துவங்கும்முன் நான் 100% போட்டிக்கு பிட் இல்லை என்று கூறியே போட்டியே துவங்கினார். ஆனால், அவர் போட்டியை துவங்கிய விதம் மட்டும் போட்டியை முடித்த விதம் அவருக்கு மேலும் ரசிகர்களை பெற்று தந்தது. நேற்றைய முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடிய அவர் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். அதிலும் நேற்று அவர் செய்த இரண்டு ஸ்டம்பிங் வேற லெவல் இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த ஸ்டம்பிங் இரண்டும் சில நொடிகள் வித்தியாசத்தில் தோனியால் சரியாக செய்யப்பட்டவை. இதனை கண்டு சில கிரிக்கெட் பிரபலங்கள் மிரண்டுவிட்டனர். மேலும், முதன்முறையாக ஸ்டம்பிங் ஆன டெல்லி கேப்டன் ஐயரும் மிரண்டு போய் பேட்டி அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

2018csk
இதனை தொடர்ந்து ஆடிய டெல்லி 16.2 அணி ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடி 44 ரன்களை குவித்தார். சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசி 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement