சென்னை அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – தோனி மகிழ்ச்சி

Dhoni
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்கள் குவித்தார்.

csk-vs-mi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் வாட்சன் (4), முரளிவிஜய் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழழந்து வெளியேற 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கே தடுமாறியது. பின்னர் விளையாடிய டூப்ளெஸ்ஸிஸ் மற்றும் ராயுடு ஆகியோரின் அபார ஆட்டத்தால் சிறப்பான ரன்குவிப்பை வழங்கியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

டுபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை.

Rayudu

இந்த போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : பயிற்சி எங்களுக்கு போதுமானதாக இருந்தது. இருப்பினும் பல நாட்களுக்கு பிறகு நாங்கள் மீண்டும் மைதானத்தின் சூழ்நிலை மற்றும் மைதானத்தில் ஒத்துழைப்பு ஆகியவற்றை கணிக்க வேண்டி இருந்தது. எங்களது பவுலர்கள் சரியான ஏரியாவில் பந்து வீசினர். மேலும் இன்னும் சில இடங்களில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். ராயுடு மற்றும் டுப்லஸ்ஸிஸ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருந்தது. அவர்களின் சிறப்பான வெற்றிக்கு காரணம்.

Rayudu 1

இந்த போட்டியில் வீரர்கள் காயம் அடையாமல் இருந்தது அதிர்ஷ்டமானது. ஏனெனில் எங்கள் அணியில் விளையாடும் பெரும்பாலானோர் ஓய்வு பெற்ற வீரர்கள். எனவே இந்த போட்டியில் காயம் இல்லாமல் சிறப்பாக முடித்துள்ளோம். அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என சமமாக இருந்தது. அறுபது எழுபது நாட்கள் சீனியர் வீரர்களுடன் இளம் வீரர்கள் பயணிக்க உள்ளதால் அவர்களுக்கும் இத்தொடர் சிறப்பான ஒன்றாக அமையும் என்று தோனி கூறினார்.

Advertisement