இன்னைக்கு தான் அவரோட வேலைய கரெக்ட்டா பண்ணியிருக்காரு. வெற்றிக்கு முழுகாரணமும் இவர்தான் – புகழ்ந்த தோனி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே அடித்தனர்.

sharukh

- Advertisement -

அதிகபட்சமாக ஷாருக்கான் 47 ரன்களையும், ரிச்சர்ட்சன் 15 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக மொயின் அலி 46 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 36 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பலம் வாய்ந்த பஞ்சாப் அணி பெரிய அளவில் ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவர்ப்ளே ஓவர்களிலேயே பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டர் முற்றிலும் முடிவுக்கு வந்தது தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேட்டியளித்த தோனி கூறுகையில் : தீபக் சாகர் ஒரு டெத் பவுலராக தன்னை டெவலப் செய்து கொண்டார். இருப்பினும் இந்த போட்டியில் அவருக்கு நல்ல லைன் அண்ட் லென்த் மற்றும் ஸ்விங் ஆகியவை இருந்தது இது போன்ற ஒரு அட்டாக்கை தான் நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். அந்த வகையில் இந்த போட்டியில் மைதானத்தின் தன்மையை அறிந்து அவர் பந்து வீசிய விதம் அற்புதமானது. ஒரு பந்து வீச்சு யூனிட்டாக எங்களிடம் இன்னும் சில பவுலர்கள் உள்ளனர். அதனால் நான் தீபக் சாகரை தொடர்ந்து 4 ஓவர்கள் வீச வைத்தேன். அது இந்த போட்டிக்கும் உதவியது அவர் வீசிய 4 ஓவர்களில் விக்கெட் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தினார் என்று தீபக் சாகரின் பந்துவீச்சை பாராட்டினார்.

chahar 1

கடந்த ஆண்டும் சரி இந்த தொடரின் முதல் போட்டியிலும் சரி தீபக் சஹர் சரிவர பந்து வீசாமல் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் தனது அபாரமான பந்து வீச்சை தீபக் சஹர் வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் வீசியது மட்டுமின்றி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement