நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்ற பிறகு மைதானத்தில் வீரர்கள் சிறிது நேரம் உலாவினர். அப்போது வாட்சன் மகனும், இம்ரான் தாஹீர் மகனும் விளையாடி கொண்டிருக்க அப்போது அதனை கவனித்த தோனி அவர்களுடன் சேர்ந்து ஓடி விளையாடினார். இதோ அந்த வீடியோ :
Jr. #ParasakthiExpress and Jr. Watto having a sprint face-off and a lightning joins them! Priceless! @msdhoni #JustThalaThings #WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/bIGEgedZYW
— Chennai Super Kings (@ChennaiIPL) April 6, 2019
அப்படி விளையாடி முடித்த பின்னர் வாட்சனின் மகன் மீண்டும் ஓடுவதற்கு தோனியை அழைக்கிறார். ஆனால், தோனி வேண்டாம் என்று கூறி சிரித்துக்கொண்டே ஓய்வு அறைக்கு திரும்பினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.
அதன்பிறகு சென்னை அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது துவக்க வீரரான டூப்ளிஸிஸ் சிறப்பாக ஆடி 54 ரன்களை அடித்தார். கடைசி கட்டத்தில் தோனி மற்றும் ராயுடு அதிரடியாக ஆடி அணியை ஒரு நல்ல இலக்கினை எட்ட உதவினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது.
அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.