அம்பத்தி ராயுடுவிற்காக ஸ்டார் ஹோட்டலை விட்டு வெளியேறிய தோணி – காரணம் இதுதான் !

rayudu
- Advertisement -

அம்பத்தி ராயுடுவிற்காக ஹோட்டலை விட்டு வெளியேறிய தோனி மற்றும் சென்னை அணியில் ஆடிக் கொண்டிருக்கும் சக வீர்களால் மிகவும் நெகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார் அம்பத்தி ராயுடு.ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அம்பத்தி ராயுடு கடந்த ஐ பி எல் போட்டிகள் வரை மும்பை ஆணியில் இடம்பெற்று வந்தார் . ஆனால் இந்த ஆண்டு சென்னை அணியில் ஆடிவரும் அம்பத்தி ராயுடு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறார்.

rayudu1

- Advertisement -

கடந்த ஞாயிற்று கிழமை ஹைட்ரபத்திற்கு எதிரான போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை விளையாடி அரை சதம் அடித்து அசந்தினார்.தனது 16 வயதில் 2001 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய அம்பத்தி ராயுடு . 2004 இல் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையின் போது இந்தியாவின் கேப்டனனாகவும் இருந்துள்ளார்.அதன் பின்னர் 2010 இல் ஐ பி எல் போட்டிகளில் ஆட துவங்கி பின்னர் 2012 இல் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் 2004 இல் சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இதனை அறிந்த அம்பத்தி ராயுடு தோனி மற்றும் சக வீரர்களுக்கு ஹைதராபாத் ஸ்பெஷல் பிரியாணியை அளிப்பதற்காக அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

bravo

ஆனால் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவு பொருட்களை நான் ஹோட்டலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. இதனை அறிந்த தோனி தன்னுடன் இறந்த சக வீரர்களான பிராவோ , சுரேஷ் ரெய்னா போன்றவர்களை ஹோட்டலுக்கு வெளியில் அழைத்து வந்து அங்கு இருந்த கார் பார்க்கிங் ஒன்றில் ராயுடு கொண்டு வந்த பிரியாணியை ருசித்துள்ளனர்.

Advertisement