ஐ.பி.எல் தொடருக்கு முன்னர் பேட்டை கையில் எடுக்கும் தோனி – அதிகாரபூர்வ அறிவிப்பு

dhonii
- Advertisement -

இந்தியாவில் அஹமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் ஆகிய அணிகள் இடையேயான போட்டியை நடத்த பி.சி.சி.ஐ யின் தலைவரான கங்குலி திட்டமிட்டிருந்தார்.

- Advertisement -

ஆனால் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்த பெரிய தொடரை பிசிசிஐ-யால் நடத்த முடியாமல் போனது. ஆனால் அந்த தொடரை தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியம் முன்வந்து நடத்துவதாக கேட்டுக்கொண்டனர். அதன்படி தற்போது அதற்கான போட்டி அட்டவணையையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி மார்ச் 18ம் தேதி முதல் டி20 போட்டியும், மார்ச் 21ஆம் தேதி இரண்டாவது டி20 நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டியும் டாக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆசிய லெவன் அணியில் இடம் விட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

dhoni

இதில் இந்திய அணி வீரர்களான கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஆர்டிக் பாண்டியா மற்றும் இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் டோனி ஆகியோர் விளையாட போகிறார்கள் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தோனி இந்தப்போட்டியில் ஆடுவது உறுதியாகி விட்டது என்றே கூறலாம் இதனால் தோனியின் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ms Dhoni Bhuvneshwar-Kumar

மேலும் இந்திய அணியால் தோனி புறக்கணிப்பட்டாலும் ஆசிய லெவனில் தோனி விளையாட இருப்பது உறுதியாகிவிட்டது. இந்த தொடருக்கான அணியில் இவர் கேப்டனாகவும் செயல்பட அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் அணி வீரர்கள் பட்டியல் உறுதியானாலும் கேப்டன் குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement