MS Dhoni : ஏ.பி.டி போன்று ஒற்றை கையில் சிக்ஸ் அடித்து அசத்திய தல தோனி

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் 4 ஆவது வீரராக சென்னை அணியின் கேப்டன் தல தோனி ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கினார். தான் சந்தித்த முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடிய தோனி 22 பந்துகளில் 44 ரன்களை குவித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் ஒரு ஷாட் பெங்களூரு அணி வீரரான ஏ.பி.டி போன்று ஒற்றை கையால் அடித்து அசத்தினார்.

இந்த போட்டியில் 180 ரன்களை எதிர்த்து ஆடிவரும் டெல்லி அணி தற்போது 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

Advertisement