இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல மாதங்கள் ஆகிவிட்டன. உலக கோப்பை தொடருக்கு பின்னர் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி இதுவரை இந்திய அணியில் விளையாட வில்லை. இந்நிலையில் தற்போது அவர் ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியை சென்னையில் மேற்கொண்டு வருகிறார்.
The HELICOPTER SHOT 🚁that worth more than million dollars 😉😍 #Dhoni #Yellove #Csk
.
Waiting for March 29th just to see him as a LEADER! 😊😎 @msdhoni pic.twitter.com/ga2aF1mDnI— Saravanan Hari 💛🦁🏏 (@CricSuperFan) March 3, 2020
தோனி குறித்து நாளுக்கு நாள் வெளிவரும் தகவல்கள் அனைத்தும் இணையத்தில் ஹிட் அடிக்க தவறுவதில்லை. அதன்படி வரும் 29ம் தேதி துவங்க உள்ள 13வது ஐபிஎல் சீசனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி கேப்டனாக சென்னை அணிக்காக விளையாடுகிறார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ள நிலையில் மேலும் இந்த ஆர்வத்தை சேர்க்கும் அளவிற்கு நேற்றைய பயிற்சி போட்டியின்போது டோனிக்கு கிடைத்த வரவேற்பு அமைந்தது.
ரசிகர்களின் ஏகோபித்த கூட்டத்திற்கு நடுவே ஒருவழியாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் அவர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். தோனி பயிற்சி செய்ய வந்திருந்த போது அரங்கமே அதிரும் அளவிற்கு தோனி தோனி என்று ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்றினையும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
மேலும் தற்போது தோனி ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் அடிக்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.