ஐ.பி.எல் தொடரில் இருந்தும் ஓய்வு பெருகிறாரா தோனி ? – அவரின் இந்த சிக்னலை கவனித்தீர்களா ?

Dhoni 1
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான வருடமாக அமைந்திருக்கிறது. தோனி மீண்டும் வருவார் என்ற ஒரே நப்பாசையில் இருந்த சென்னை ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. முதலில் ஐபிஎல் தொடரில் ஆட பயிற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு வருடம் கழித்து பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் படு மோசமாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் இருந்து வருகிறது. தொடர்ச்சியாக டெல்லி ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை என அனைத்து அணிகளிடமும் மோசமாக தோல்வி அடைந்துவிட்டது. இதன் காரணமாக இந்த வருடம் பிளே ஆப் வாய்ப்பை முற்றிலுமாக இழுந்துவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரே ஒரு போட்டியில் மட்டும் 40 ரன்கள் எடுத்து இருக்கிறார். வேறு எந்த போட்டியிலும் 30 ரன்களை கூட தொடவில்லை அவரது பேட்டிங்கில் பழைய வேகம் இல்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறப் போகிறார் என்ற ஒரு சந்தேகம் ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்கள் இடமும் வலுத்துள்ளது.

Dhoni-1

ஐபிஎல் போட்டிகளில் தோனி மந்தமாக ஆடுகிறார். அதுமட்டுமின்றி பழையபடி அவரால் சூழ்நிலையை கணிக்கமுடியவில்லை. மேலும் சென்னை அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய வேலையும் இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த வருட ஐபிஎல் தொடரில் தோனி ஆடுவாரா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்து கொண்டிருக்கிறது.

pandya

அதுமட்டுமின்றி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஆட்டம் முடிந்ததும் அந்த அணியின் வீரரான பட்லருக்கு தனது ஜெர்சியை வழங்கினார். அதேபோன்று மும்பை அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் பாண்டியா சகோதரர்களுக்கு தனது ஜெர்சியை வழங்கினார். இதையெல்லாம் அவர் அவர்களுக்கு நினைவு பரிசாக வழங்கியுள்ளார். இதனை வைத்து பார்க்கும்போது தோனி ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது என்பது தெரியவருகிறது.

Advertisement