முதல் போட்டி முடிந்ததும் போலீஸ் ஆணையரிடம் புகார் ஒன்றினை அளித்த தோனி – விவரம் உள்ளே

CSKdhoni
- Advertisement -

நேற்று துவங்கிய 12ஆவது ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து ஆடிய சென்னை அணி எளிமையாக சேசிங் செய்து பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

VK and MS

- Advertisement -

இந்த போட்டியை அடுத்து சென்னை அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க உள்ளது. இதற்காக சென்னை அணி இன்று விமானம் மூலம் டெல்லி செல்ல விமான நிலையம் சென்றது. இதற்கு முன்னதாக சென்னை அணியின் கேப்டன் தோனி தமிழக தெற்கு சென்னை ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார் .

தோனி அந்த மனு கொடுத்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த காரணம் :
சென்னை அணி வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட சென்னை அடையாறில் உள்ள கிரவுன் பிளாசா என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளது. இந்த ஹோட்டலுக்கு வரும் தமிழக காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் தோனியை சந்திக்க வேண்டும் என்றும், புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தோனியை தொந்தரவு செய்கிறார்களாம் .

இதனால் கடும் கடுப்பு அடைந்த தோனி காவல்துறை வாரிசுகளின் மீது சென்னை தெற்கு காவல் ஆணையரிடம் புகார் மனுவினை அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement