உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.
பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.
Indian fans are waiting for Kedar Dhoni duo to start hitting #INDvAFG pic.twitter.com/CDxVJ9agKV
— Subham (@subhsays) June 22, 2019
இந்த போட்டியில் கேப்டன் கோலி கூறியது போலவே மைதானம் ரன்கள் சேகரிப்பதற்கு கடினமாக இருந்தாலும் இந்த அளவிற்கு பொறுமையாக விளையாடுவது என்று தோனியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். நேற்றைய ஆட்டத்தில் 52 பந்துகளை சந்தித்த தோனி 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிலும் பல பந்துகளை அவர் டாட்பால் ஆக்கியது குறிப்பிடத்தக்கது. தோனி அடிப்பாரா அடிப்பாரா என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் அவரது இந்த ஆட்டத்தை சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் இறுதியில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.