KKR vs CSK : மகளாக தத்துஎடுத்து கொள்கிறீர்களா ? தோனியிடம் வேண்டுகோள் விடுத்த பெண் ரசிகை – விவரம் இதோ

நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் தோனியின் பெண் ரசிகை ஒருவரின் செயல்

Ziva
- Advertisement -

நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் தோனியின் பெண் ரசிகை ஒருவரின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ரசிகை என்னை உங்களுடைய பெரிய மகளாக ஏற்றுக்கொள்வீர்களா தோனி ? நான் ஜிவாவை தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பேனரில் எழுதி போட்டியை காண மைதானத்தில் இருந்தார். இவரது இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் :

Dhoni fan

- Advertisement -

தோனி ரசிகையான இவர் மைதானத்தில் இந்த பேனரை வைத்தே போட்டியை ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தினை சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணிகளும் மோதின.

Dhoni

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது சென்னை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் துவக்க வீரரான க்றிஸ் லின் 51 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

Tahir-2

அடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரெய்னா 42 பந்துகளில் 58 ரன்களும், ஜடேஜா 17 பந்துகளில் 31 ரன்களையும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement