கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அணி பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தது ஆட்டமிழந்து வெளியேற தோனி ஒருவரே அணியின் சுமையை தோளில் சுமந்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய தோனி 48 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 84 ரன்களை குவித்து பெங்களூரு அணிக்கு பயத்தை காட்டினார். இதனால் சென்னை அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணி ரசிகர்கள் இந்த தோல்வியை மறந்து தோனியின் இந்த சிறப்பான பேட்டிங்கை கொண்டாடி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தோனியை வலைத்தளங்களில் புகழ்ந்து வந்தனர். தற்போது அதற்கு அடுத்தபடியாக தோனியை பிரதமர் ஆக்குவோம் என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் புரட்சி செய்து வருகின்றனர். தோனியின் பல ரசிகர்கள் தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் அரசியலில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பிக்கவேண்டும் என்று கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு ரசிகர் ராகுல் மற்றும் மோடியை மறந்துவிடுங்க தல தோனியே அடுத்த பிரதமர் என்று ட்விட் செய்துள்ளார். இந்த ட்விட் சமூக வலைத்தளத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.
#DhoniForPM People love you for who you are @msdhoni.. after retirement please consider Politics as your new profession.. if anyone can give stiff competition to @narendramodi it’s you Mahi.. #IPL2019 #LokSabhaElections2019
— Tanmay Bhardwaj (@Tanmay_27) April 22, 2019
Forget Modi and Rahul Gandhi, let’s make @msdhoni PM!#DhoniForPM
— Vishwas Dwivedi (@Vish_A_) April 21, 2019
தோனிக்கு என தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இந்தியா மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் இருக்கின்றனர். அவர்களும் தோனி பிரதமர் ஆக வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். ஆனால், தோனிக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே விருப்பம். ஏற்கனவே அவர் இந்திய ராணுவத்தில் கவுரவ பதவியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.