MS Dhoni : தோனியை தடுத்து நிறுத்தினாலும் இவர்களை கட்டுப்படுத்த முடியாது – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் 3 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும்

MS
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் 3 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

ind vs aus

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் தவான் 117 ரன்களும், கோலி 82 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோனி பயன்படுத்தி கீப்பிங் கிளவுஸ் சர்ச்சைக்கு உள்ளாகியது. இதனால் ஐசிசி தோனியை அந்த கிளவுசை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியது. இதை பிசிசிஐ தோனிக்கு முறையிட தோனியும் அதனை ஒப்புக் கொண்டார். ஆனால் தோனியின் ரசிகர்களோ இதனை தற்போது பெரிய விடயமாக மாற்றியுள்ளனர்.

dhoni

அது யாதெனில் தோனியை நீங்கள் அந்த கிளவுஸ் பயன்படுத்தக் கூடாது என்று கூற முடியும் ஆனால் எங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. தோனி எதனை பயன்படுத்தக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை நாங்கள் காண்பிக்கிறோம் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்பது போல தோனி ரசிகர்கள் தோனி பயன்படுத்திய அந்த முத்திரையை வரைந்தபடி மைதானத்தில் வலம் வந்தது தோனி ரசிகர்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement