தோனியை துரத்திய அந்த வாலிபர் யார் தெரியுமா ? – விசாரணையில் வெளிவந்த உண்மை

MSD
- Advertisement -

நேற்று சிஎஸ்கே அணி வீரர்கள் இரவு காட்சி போட்டியில் விளையாடினர். இந்த காட்சி போட்டிக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு சென்னை அணியை ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

Raina

- Advertisement -

இந்தப் போட்டிக்கு முன்பாக தோனி மைதானத்திற்குள் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கும்போது மைதான பாதுகாப்புகளை மீதி ஒரு இளம் ரசிகர் தோனியை துரத்திச் சென்று அவருடன் கை குலுக்கினார் இந்த வீடியோ வைரல் ஆனது.

தோனியுடன் கைகுலுக்கிய அந்த நபரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற பாதுகாவலர்கள் அவரை போலீசிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் மதுரையை சேர்ந்தவர் என்றும் மேலும் அவருடைய பெயர் அரவிந்த் குமார் எம்பிஏ முதலாம் ஆண்டு படிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

தோனியின் மிகப்பெரிய ரசிகன் அவர் தோனியை நேரில் சந்திக்க மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு வந்தது தெரியவந்துள்ளது. இதுபோன்ற தோனியின் தீவிர ரசிகர்கள் செய்யும் செயல் ஒன்றும் புதிதல்ல அந்த வகையில் இவரும் தல தோனியின் தீவிர ரசிகர் ஆவார்.

Advertisement