MS Dhoni : மைதானத்தில் சி.எஸ்.கே ரசிகர்களை கவர்ந்து இழுத்த தோனி ரசிகரின் செயல் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Dhoni-Csk
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் தோனி ரசிகர் ஒருவரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி தோனியின் ரசிகரான அவர் நீங்கள் குணமடைந்து இந்த போட்டியில் விளையாட வேண்டும். அதனை காணவே நான் பெங்களூருவில் இருந்து வந்துள்ளேன் என்ற பதாகையுடன் மைதானத்திற்குள் வந்தார்.

Dhoni Fan

இவரின் வருகையினை சி.எஸ்.கே அணி நிர்வாகம் புகைப்படமாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பெங்களுருவில் இருந்து வந்த சி.எஸ்.கே ரசிகரின் அந்த புகைப்படத்தை தோனியின் ரசிகர்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

Advertisement