தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவுள்ள தோனி எண்டர்டெயின்மெண்ட் – ஹீரோ யார் தெரியுமா?

Dhoni-Entertainment
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் பங்கேற்காமல் இருந்து வந்த வேளையில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். ஆனாலும் அதனை தொடர்ந்து தற்போது வரை ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் இந்த ஆண்டு சென்னை ரசிகர்களின் மத்தியில் ஓய்வை அறிவித்து கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக விடை பெறுவார் என்று தெரிகிறது.

அந்த வகையில் கிரிக்கெட் கரியரை அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. ஏற்கனவே அவர் ஆடை வடிவமைப்பு, விவசாயம், பள்ளிகள், கிரிக்கெட் அகாடெமி என பல்வேறு வேலைகளை செய்து வரும் வேளையில் அடுத்ததாக தோனி என்டர்டைன்மென்ட் என்கிற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு கம்பெனியை அவர் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

தோனியின் இந்த புதிய திரைப்பட தயாரிப்பு கம்பெனியானது அவர்களது மனைவி சாக்க்ஷி தோனியின் மூலம் நடத்தப்படும் என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பாலிவுட்டில் சில திரைப்படங்கள் இவரது பேனரில் வெளியாகியுள்ள வேளையில் இனி முற்றிலும் பாலிவுட் நடிகர்களை வைத்து தோனி படம் தயாரிக்கப் போவதில்லை என்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் அவர் அதிக படங்களை தயாரிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக தோனி என்டர்டைன்மென்ட் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அவர்கள் ஆரம்பித்து அதில் தங்களது லோகோவையும் வெளியிட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விடயம் யாதெனில் தோனி கடந்த பல ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடி வருவதாலும் தென்னிந்திய மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகவும் அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே படம் தயாரிக்க கவனமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் தென்னிந்திய நடிகர்களான அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரது நடிப்பில் தெலுங்கு படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் என்று தெரிகிறது. அதேபோன்று தமிழ் திரைப்பட உலகில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகரான சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரை வைத்து திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அந்த 2 பேரை நம்பி மட்டும் தான் இருக்கு. ஆனா இந்தியா அப்படி கிடையாது – சஞ்சய் பாங்கர் கருத்து

ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனது பெயரில் ஒரு பள்ளியை ஆரம்பித்துள்ள தோனி தற்போது தமிழ் சினிமாவிலும் சில திரைப்படங்களை தயாரிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விரைவில் தமிழ் படத்திற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement