MS Dhoni : ஐ.பி.எல் தொடரின் இந்த சிறிய இடைவெளியில் தோனி செய்த மெய்சிலிர்க்க வைக்கும் செயல் – விவரம் இதோ

தோனி தலைமையிலான சென்னை அணி தற்போது 14 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி மற்றும் 5 போட்டிகளில் தோல்வி என 18 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில்

zivadhoni
- Advertisement -

தோனி தலைமையிலான சென்னை அணி தற்போது 14 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி மற்றும் 5 போட்டிகளில் தோல்வி என 18 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பெற்று பிளேஆப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னை அணியின் கேப்டன் நம்ம தல தோனி மற்றும் அவருடைய மகள் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக மகளின் சேட்டைகளை விடியோவாக வெளியிடும் தோனி இம்முறை சமூக அக்கறை நோக்கில் இந்த விடீயோவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதாவது இந்தியாவில் தற்போது பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து 5 ஆவது கட்டமாக ராஞ்சி பகுதியில் நடந்த தேர்தலுக்கு தோனி ஐ.பி.எல் தொடரின் இந்த சிறிய இடைவெளியில் நேரில் சென்று வாக்களித்தார். அதன்பின்னர் விரலில் தேர்தல் மையுடன் அவரது மகள் மூலம் அனைவரும் ஒட்டு போடவேண்டும் என்று அவரது மகள் வாயிலாக சொல்லி அதனை விடியோவாக வெளியிட்டுள்ளார் தோனி.

இந்த வீடியோவில் ஸிவா, “போய்.. அம்மா, அப்பா மாதிரி ஓட்டு போடுங்க..” என தன் பிஞ்சுக் சுட்டுவிரலை காட்டி மக்களை தங்கள் ஜனநாயக கடமையை செய்யுமாறு வலியுறுத்துகிறார். இந்த வீடியோ தற்போது தோனி ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement