ரிசர்வ் டே ஆன இன்று நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்து ஆடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டைலர் 74 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணிக்கு 240 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை துரத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ராகுல், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி ஆரம்பத்திலேயே அதலபாதாளத்திற்கு சென்றது. பின்னர் இறுதியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 59 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அவுட்டானார்.
அவர் அவுட் ஆனதும் இந்திய அணி இன்னிங்ஸ் முடிந்து விட்டது என்று இந்திய ரசிகர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர். தோனி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
This breaks my heart into million Pieces ???? You bash him & still fightes for You ???? No bc you’re not hurt You’re just sad !! He’s hurt cuz he plays for his country not for Crowd ???? Haters You’ll never understand him.never????
37 Year old Man is Crying for his country ???? #Dhoni pic.twitter.com/4YKdixihPJ— ???? (@RKsChanna) July 10, 2019
இன்றைய போட்டியில் கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும்போது தோனி நிச்சயம் அணிக்கு வெற்றியை தேடித்தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அணி 19 ஓவரில் ஒரு சிக்சர் அடித்து விட்டு அதே ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். தோனியின் கடைசி ஒருநாள் போட்டி என்பதால் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் அவரிடம் காணப்பட்டது. சோகத்துடன் வெளியேறிய துணி கிட்டத்தட்ட அழுதே விட்டார். அவர் அழுது கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.