இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டுமுதல் ஐபிஎல் தொடர் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது 14வது சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
அதனால் மீண்டும் எப்பொழுது இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் பிசிசிஐ-யின் தீவிர முயற்சியினால் தற்போது இந்த ஆண்டு இந்தியாவில் போட்டிகள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த போட்டிகள் நடைபெறும் மைதானங்களையும் தற்போது பிசிசிஐ தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
அந்த வகையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியதால் இந்த முறை சிஎஸ்கே அணி பலமாக திரும்பும் என்றும் அதற்குண்டான வீரர்களை தயார் செய்யும் என்றும் எதிர்பார்த்திருந்தனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஏலத்தின் போது சில முக்கிய வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.
The Singa Nadai to start off the day with! Thala Coming! #DenComing #WhistlePodu #Yellove 💛🦁 @msdhoni pic.twitter.com/nu6XOmJ8qo
— Chennai Super Kings (@ChennaiIPL) March 4, 2021
அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி மீண்டும் எப்போது பயிற்சிக்கு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நேற்று சென்னை அணியில் முதல் ஆளாக தோனி சென்னை வந்தடைந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே நிர்வாகிகள் என பலரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Thalai-Vaa! 🙏🏽🦁
Smile with the Mass(k) on! Super Night! #DenComing #WhistlePodu #Yellove 💛 pic.twitter.com/zjjDowuOmL
— Chennai Super Kings (@ChennaiIPL) March 3, 2021
சென்னை வந்து அவர் விரைவில் பயிற்சியை துவங்குவார் என்றும் இந்த ஆண்டு தொடரில் வெற்றி பெற முனைப்புப்பு காட்டுவார் என்றும் தெரிகிறது. நேற்று தல தோனி சென்னை வந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.