MS Dhoni : நானும் வாட்சனும் இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தால் கொண்டாடுவதில்லை – தோனி விளக்கம்

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆடிய டெல்லி 16.2 அணி ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடி 44 ரன்களை குவித்தார். சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசி 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து இம்ரான் தாஹிர் விக்கெட் கொண்டாட்டத்தை பற்றி பேசிய தோனி கூறியதாவது : நானும் ஷேன் வாட்சனும் தாஹிர் விக்கெட் எடுத்தால் அதனை கொண்டாட செல்வதில்லை. ஏனெனில் நாங்கள் அவரை கொண்டாடும் விதமாக ஓடிய போது அவர் நாங்கள் வருவதனை கண்டு எதிர்புறமாக ஓடி தனது கொண்டாட்டத்தினை கொண்டாடுகிறார்.

Tahir

இது ஒருமுறை மட்டும் கிடையாது. எப்போதெல்லாம் அவர் விக்கெட் வீழ்த்துகிறாரோ அப்போதெல்லாம் அணி வீரர்கள் அவரை நோக்கி ஓடினால் அவர் மறுபுறம் மைதானம் முழுவதும் ஓடுவார். இதனால் நானும் தோனியும் அவரின் விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று எங்களுக்குள் ஒரு உடன்படிக்கையில் ஈடுபட்டோம் இருப்பினும் அவரின் இந்த விக்கெட் கொண்டாட்டம் ரசிக்கும்படி இருக்கும் என்றும் தோனி கூறினார்.

Advertisement