மீண்டும் அப்பாவாகவுள்ள தோனி. யெஸ் சாக்க்ஷி இஸ் ப்ரெக்னென்ட் – உறுதி செய்த சி.எஸ்.கே வீரரின் மனைவி

Sakshi
- Advertisement -

மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பத்திலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் தோனி ஏற்கனவே 3 முறை சென்னை அணியின் கேப்டனாக கோப்பையை வென்றுள்ள நிலையில் இந்த ஆண்டும் கோப்பையை கைப்பற்றி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Dhoni-3

- Advertisement -

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது 40 வயதாகும் தோனி 2010ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி சாக்ஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இந்த தம்பதிக்கு 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

தோனி எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு அவருடைய மகள் ஸிவா தோனியும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற பிறகு வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைத்தனர். அப்போது அணி வீரர்களின் குடும்பத்தினரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

sakshi 1

அந்த வகையில் தோனியின் மனைவி மற்றும் மகள் மட்டுமின்றி சிஎஸ்கே அணி வீரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று தோனியின் நெருங்கிய நண்பரான ரெய்னாவின் மனைவி பிரியங்கா உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

raina

மேலும் 2022 ஆம் ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த செய்தியானது தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவர் கூறியது போன்றே தோனியின் மனைவி தற்போது சற்று உடல் எடையை அதிகரித்தும் சற்று லூசாக உடை அணிந்திருப்பதால் நிச்சயம் அவர் கர்பமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி குறிப்பிடத்தக்கது.

Advertisement