சென்னை அணி நேற்று கொல்கத்தா அணியுடனான போட்டியில் பங்கேற்று சென்னையில் விளையாடியது. இந்த போட்டியில் 7 விக்கெட்வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. அடுத்ததாக சென்னை அணி நாளை ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் விளையாட இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் செல்ல சென்னை விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது விமானம் தாமதமாக வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை அணியின் கேப்டன் தல தோனி மற்றும் அவரது மனைவி ஷாக்சி ஆகியோர் விமான நிலைய தரையிலே இருவரும் படுத்துறங்கினர். இதோ அந்த புகைப்படம் :
Doze Off ➡️ Take off! ✈️#WhistlePodu #Yellove #Repost @msdhoni pic.twitter.com/3E0jbp6YbF
— Chennai Super Kings (@ChennaiIPL) April 10, 2019
ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணிக்கு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கொல்கத்தா அணி சார்பாக 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரசல் 44 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ரசலின் இந்த ஆட்டம் காரணமாகவே கொல்கத்தா அணி ஓரளவு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர் டுபிலிஸிஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். தீபக் சாகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.