RR vs DC : எனது உணவுப்பழக்கம் முறையே எனது ஆட்டத்தை மாற்றியது – கிண்டலாக பேசிய தவான்

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Dhawan
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 50 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக பண்ட் 36 பந்தில் 78 ரன்களை அடித்தார். தவான் 27 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.

Pant

போட்டி முடிந்து பேசிய டெல்லி அணியின் துவக்க வீரர் தவான் கூறியதாவது : நான் இப்போது வெஜிடேரியனாக மாறிவிட்டேன். எனவே சைவ வகை காய்கறிகளை உண்பதால் என் மனநிலை மாறி போட்டிகளில் மெதுவாக ஆடாமல் அதிரடியாக ஆடுகிறேன் என்று கிண்டல் செய்தபடி பேசினார் தவான். மேலும், கடந்த சில போட்டிகளாக என் மனநிலையை மாற்றி ஆடுவதால் என்னால் சிறப்பாக ஆடமுடிகிறது, அணிக்கும் நல்ல துவக்கம் கிடைக்கிறது.

குறிப்பாக பெங்களூரு போட்டியில் இருந்து எனது ஆட்டத்தை மாற்றினேன். முதலில் விக்கெட்டுகளை கணித்து பொறுமையாக துவங்கி ஆடுவேன். ஆனால், தற்போது இறங்கியதும் ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்து இருக்கிறேன். இதனால் முதல் ஓவரில் இருந்தே என்னால் சிறப்பாக ஆடமுடிகிறது என்று தவான் கூறினார்.

Advertisement