IND vs WI : எனக்கு இந்த விஷயத்தை நெனச்சா பெருமையா இருக்கு – தொடர் வெற்றிக்கு பின்னர் தவான் பேட்டி

Shikhar-Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற முடிந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியானது சிறப்பான ஆட்டத்தை விளையாடி அற்புதமாக துவங்கியது.

Shubman Gill 98

- Advertisement -

இருப்பினும் இடையே மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டதால் ஆட்டம் 36 ஓவர்கள் வரை மட்டுமே நடைபெற்றது. அப்படி 36 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 225 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் துவக்க வீரரான ஷிகார் தவான் 58 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் இறுதிவரை ஆட்டமிடக்காமல் இருந்த மற்றொரு துவக்கவீரர் சுப்மன் கில் 98 பந்துகளில் 98 ரன்கள் குவித்து இருந்தார். பின்னர் தொடர்ந்து விளையாடிய வேஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Mohammed Siraj vs WI

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசியே இந்திய அணியின் கேப்டன் ஷிகார் தவான் கூறுகையில் : நமது இந்திய அணியில் தற்போது உள்ள வீரர்கள் அனைவருமே இளமையான வீரர்கள். ஆனாலும் அவர்கள் தங்களது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு வீரரும் களத்தில் மிக சிறப்பாக நடந்து கொண்டனர்.

- Advertisement -

ஒரு அணியாக நான் அவர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இது இந்திய அணிக்கு ஒரு நல்ல அறிகுறி. அதேபோன்று தனிப்பட்ட வகையில் என்னுடைய பேட்டிங் ஃபார்மும் சிறப்பாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன். அந்த வகையில் நான் விளையாடிய விதம் எனக்கு திருப்தி அளிக்கிறது.

இதையும் படிங்க : சர்வதேச வரலாற்றில் தேசத்துக்காக கிரிக்கெட்டில் விளையாடிய கணவன் – மனைவி ஜோடிகள், சிறப்பு பதிவு

சுப்மன் கில் 98 ரன்கள் அடித்தது மிகச் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் நமது அணியில் உள்ள அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். அதிலும் குறிப்பாக நான் நமது பவுலிங் யூனிட்டை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனெனில் அவர்கள் அனைவருமே 100% சதவீதம் உழைப்பை அளித்தனர் என்று தவான் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement