இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் போட்டியானது நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட என்ன காரணம்? :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 10.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்த வேளையில் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து போட்டியை நேரில் காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
இப்படி பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட என்ன காரணம்? என்பது குறித்த குழப்பமும் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட என்ன காரணம்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவலின் படி : போட்டி நடைபெற்ற தரம்சாலா மைதானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. மைதானத்தின் ஒரு பகுதியில் மின்சார விநியோகம் தடைபட்டதால் மின்விளக்குகள் வேலை செய்யவில்லை. மேலும் இன்னும் சில தொழில்நுட்ப கோளாறுகள் மின் சாதனைகளில் ஏற்பட்டதன் காரணமாக போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாகவே ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. மேலும் இந்த போட்டி பாதியிலேயே தடைப்பட்ட தடங்களுக்காக வருந்துவதாகவும், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கடைசியா அந்த கோப்பையையும் என் அலமாரியில் அடுக்கிட்டு தான் மொத்தமாக ரிட்டையராவேன்.. ரோஹித் உறுதி
நேற்றைய போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி 2 அணிகளுக்கும் புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டால் அது பிளே ஆப் சுற்றுக்கான போட்டியை மேலும் கடினமாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.