கோலியின் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் இதுதான் – மனம்திறந்த டிவில்லியர்ஸ்

ABD
- Advertisement -

இந்த ஆண்டு 12 வது வருடமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இந்த வருடம் நடைபெற உள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி வரும் 23 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

VK and MS

- Advertisement -

இந்நிலையில் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி குறித்து பெங்களூர் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார் அதில் டிவில்லியர்ஸ் கோலி குறித்து கூறியதாவது :

நானும் விராட் கோலியும் கடந்த எட்டு வருடங்களாக இணைந்து ஆடிய வருகிறோம். கோலியின் சிறப்பான பேட்டிங்கை நான் பலமுறை எதிர் திசையில் இருந்து பார்த்துள்ளேன். அவரின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு அவரது மனவலிமையும் அவருடைய ஆளுமையும் தான் காரணம் என்றும் மேலும், கடந்த சில வருடங்களாக கோலி அபரிவிதமான பார்மில் உள்ளார்.

RCB2019

இன்றைய மாடர்ன் கிரிக்கெட்டில் கோலி ஒருநாள் போட்டிகளில் வேற லெவல் விளையாடி வருகிறார். வரும் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன். மேலும், தென் ஆபிரிக்க அணி சிறப்பாக விளையாடினாலும் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இல்லை என்றே நான் நினைக்கிறேன். என்று டிவிலியர்ஸ் கூறினார்.

Advertisement