டிவில்லியர்ஸ் விளையாடுவதை வேடிக்கை பார்த்த நான் இன்று அவருடன் விளையாடுறேன் – கனவு நனவானது

ABD
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் அடித்தது.

abd

- Advertisement -

துவக்க வீரர்கள் படிக்கல் 54 ரன்களும், பின்ச் 52 ரன்களும் அடித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த கோலி 3 ரன்களுக்கு ஆட்டம் இருந்தாலும் டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 55 ரன்களும், துபே 27 ரன்கள் அடித்து அணி அணியின் ரன் குவிப்புக்கு உதவினர். அதனைத்தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்கள், டிகாக் 14 ரன்கள், சூர்யகுமார் யாதவ் டக் அவுட் என 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

ஆனால் பின்னால் நங்கூரம் பாச்சிய இஷான் கிஷன் மற்றும் பொல்லார்ட் ஜோடி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற கட்டத்திலிருந்து போட்டியை சிறப்பாக இறுதிவரை கொண்டுசென்றனர். 5 ஓவருக்கு 90 ரன்கள் தேவை என்ற நிலையிலிருந்து போட்டியை “டை” ஆக்கினார்கள். இஷன் கிஷன் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பொல்லார்ட் 60 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இரு அணிகளும் 201 ரன்களை குவித்தது போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தப்போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க வீரரான படிக்கல் தனது மூன்றாவது ஐ.பி.எல் போட்டியில் விளையாடி 40 பந்துகளில் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் என அசத்தலாக 54 ரன்கள் குவித்தார். 20 வயதான இளம் வீரரான இவர் சர்வதேச அளவிலான பவுலர்களான டிரென்ட் போல்ட், பும்ரா, பேட்டின்சன், பொல்லார்ட் என அனைவரையும் சிறப்பாக எதிர்கொண்டார். இந்த தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது அரைசதம் இதுவாகும்.

- Advertisement -

அந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் படிக்கல் பேட்டிங் செய்து முடித்த பிறகு இன்னிங்ஸ் இடைவேளையில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் டிவில்லியர்ஸ் குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : எனக்கு இருபது வயது தான் தற்போது நடக்கிறது. நான் டீன் ஏஜில் பெங்களூர் அணிக்காக டிவிலியர்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் போது மைதானத்தில் ரசிகராக அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

padikkal

ஆனால் தற்போது அவருடன் விளையாடும் அளவிற்கு வந்துள்ளேன். என்னுடைய கனவு நிறைவேறி உள்ளதாக நான் நினைக்கிறேன். அவர் போன்ற ஜாம்பவான் உடன் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மேலும் பல உலகின் முன்னணி வீரர்களை இத்தொடரில் சந்திப்பதும் அவர்களுடன் விளையாடுவதும் ஒரு சுவாரசியம் தான் என்று தனது மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

Advertisement