.ஆர்.சி.பி அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா உறுதி – பெங்களூரு அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு

Padikkal 3
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தற்போது மிகத்தீவிரமாக வலுப்பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே மீண்டும் இந்தியா முழுவதும் அதிகரிக்கத் துவங்கியுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் அபாயமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அதனைப் போன்றே தற்போது வெகு வேகமாக நாடு முழுவதும் பரவி வருகிறது.

prasidh krishna 1

- Advertisement -

சாதாரண மக்கள் இன்றி பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரையும் பாதித்து வரும் கொரோனா வைரஸ் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக சாலை பாதுகாப்பு தொடரில் விளையாடிய சச்சின், யூசப் பதான், இர்பான் பதான், பத்ரிநாத் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் மற்றும் சிஎஸ்கே அணியின் சமூக ஊடகத் துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியது. இந்நிலையில் தற்போது பெங்களூரு அணியில் இளம் தொடக்க வீரரான தேவ்தத் படிகலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த விடயம் ஆர்சிபி அணிக்கு சற்று பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக அறிமுகமாகி விளையாடிய இளம் வீரர் படிக்கல் 15 போட்டிகளில் 473 ரன்களை குவித்து அந்த சீசனில் வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை பெற்றார்.

Padikkal 2

இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப் படுத்திக் கொண்டு ஆர்சிபி அணியின் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement