எங்க அப்பா தான் முக்கியம்னு அவர்கூட இருந்தேன்.. இப்போ நான் ரெடி.. அடுத்த டார்கெட் குறித்து பேசிய – தீபக் சாஹர்

Deepak-Chahar
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 13 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 73 போட்டியில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் சமீப காலமாக இந்திய அணியில் விளையாடாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது பார்வையும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரின் மீதே உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கொண்ட காம்பினேஷன் அடிப்படையில் டி20 உலக கோப்பை தொடருக்கான அணி தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதன்காரணமாக தற்போது அனைத்து வீரர்களும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பினை பெறுவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரும் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு தேசிய கிரிக்கெட் அகடாமிக்கு சென்று உடற்தகுதியையு மேம்படுத்தியுள்ளார்.

கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சாஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த தென்னாப்பிரிக்க தொடர், ஆப்கானிஸ்தான் தொடர் என அடுத்தடுத்த தொடர்களை தவற விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர் இது குறித்து பேசுகையில் கூறியதாவது : எனது தந்தை தான் எனக்கு எல்லாவற்றை விட முக்கியம். எனவே அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்திய அணியில் இருந்து வெளியேறினேன். எனது தந்தை மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருக்கும் போது நான் வெளிநாடு சென்று விளையாடினால் நான் ஒரு நல்ல மகனே கிடையாது. எனவே இந்திய அணியில் இருந்து வெளியேறி 25 நாட்கள் அவருடனே தங்கி இருந்தேன்.

இதையும் படிங்க : அடிக்கவே முயற்சிக்கல.. சிங்கிள் கூடவா மாற்ற தெரியாது.. கில்லை விளாசும் முன்னாள் இந்திய வீரர்

தற்போது எனது தந்தை நல்ல உடல் நிலையை எட்டியுள்ளார். நான் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று நல்ல பயிற்சியையும் மேற்கொண்டு டி20 உலக கோப்பை தொடருக்காக தயாராகி உள்ளேன். அடுத்து என்னுடைய இலக்கை டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான். ஏற்கனவே இரண்டு முறை டி20 உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வாய்ப்பினை பெறாத நான் இம்முறை நிச்சயம் அந்த வாய்ப்பை எட்டி பிடிப்பேன் என தீபக் சாஹர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement