சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் பெங்களூர் அதிரடி வீரர் ..! திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Abrcb
- Advertisement -

கிரிக்கெட் உலகில் மிஸ்டர்.360 என்று அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டிலிருந்து தான் ஒய்வு பெறுவதாக நேற்று (மே 23) அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்களும் மற்றும் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் சற்று சோகத்தில் ஆழ்த்துள்ளனர்.

De villiers

- Advertisement -

ஏ பி டிவில்லியர்ஸ், தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரராண இவர், `14 ஆண்டுகளாக அந்த அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 228 ஒருநாள் போட்டிகள், 114 டெஸ்ட் போட்டிகள், 78 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.அதிரடி ஆட்டக்காரராக இவர் அந்த அணியின் சிறந்த விக்கெட் கீப்பராகவும் இருந்து வந்தார்.

தற்போது 34 வயதாகும் ஏ பி டிவில்லியர்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்வதுடன், இந்த வயதிலும் பீல்டிங்கிலும் அசத்தி வந்தார். தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணியில் விளையாடி 12 போட்டிகளில் 480 ரன்களையும் குவித்திருந்தார்.

devilliersrcb

ஏ பி டிவில்லியர்சிற்கு பல்வேறு நாட்டு ரசிகர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏ பி டிவில்லியர்ஸ் நேற்று தான் சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஒய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது பல ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். அடுத்த ஆண்டு உலக கோப்பை நடைபெறவுள்ள நிலையில் ஏ பி டிவில்லியர்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளது தென்னாபிரிக்க அணிக்கு மிக பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

Advertisement