இவரை எதுக்கு மும்பை அணியில் சேர்த்தீங்க. இவருக்கு பதிலா அவரே ஆடியிருக்கலாம் – கழுவி ஊற்றிய ரசிகர்கள்

RcbvsMi-1
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி அதனுடைய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மாவுடன் இணைந்து க்றிஸ் லின் ஓபனிங் விளையாடினார். டீகாக் குவாரண்டினில் இருந்ததால் அவரால் முதல் போட்டியில் களம் இறங்க முடியவில்லை. இதன் காரணமாக லின்னுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

lynn

- Advertisement -

களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை ரன் அவுட் ஆக வைத்து விட்டார். இருந்தபோதிலும் அவர் பொறுப்பாக விளையாடி 35 பந்துகளில் 49 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் சூரியகுமார் யாதவ் 31, இஷன் கிஷன் 28 அடிக்க மும்பை அணியால் வெறும் 159 தான் எடுக்க முடிந்தது. அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி மும்பை அணி நிர்ணயித்த இலக்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் எட்டி வெற்றி அடைந்தது.

அந்த போட்டி முடிந்தவுடன் டீ காக் நிச்சயமாக இனி அடுத்த போட்டிகளில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர்.
ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் இன்று டீ காக் நிச்சயமாக விளையாடுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் நடவடிக்கை இயக்குனர் ஜாஹீர் கான் கூறியிருந்தார்.

Dekock

அவருக்கான தனிமை காலம் முடிந்துவிட்டது.குவாரண்டினில் இருந்து வெளியே வந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், இன்றைய போட்டியில் நிச்சயமாக அவர் களம் இறங்கப் போகிறார் என்றும் ஜாகிர் கான் கூறியுள்ளார்
.
Dekock

இன்று டீ காக் விளையாட போவது மும்பை ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசமான செய்தியாக அமைந்தது. இருப்பினும் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய அவர் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைக்கண்ட ரசிகர்கள் இதற்கு க்றிஸ் லின்னே அணியில் விளையாடி இருக்கலாம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement