சென்னை அணிக்கு ஏற்பட்ட அடுத்த சறுக்கல். தொடரில் இருந்து மற்றொரு வீரர் விலகல் – விவரம் உள்ளே

2018csk
- Advertisement -

12ஆவது ஐ.பி.எல் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்றுவரை 8 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த வருடமும் துவக்கம் முதலே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. சென்னை அணி எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Ipl cup

- Advertisement -

சென்னை அணியில் ஏற்கனவே தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி தசைப்பிடிப்பு காரணமாக தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் அடுத்ததாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பதனை சென்னை அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லே இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருடைய மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் அவருக்கு இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்க உள்ளது. அதனால் பிரசவ நேரத்தில் அவரது மனைவியுடன் நேரத்தினை செலவழிக்கவே அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

david-villey

இதனை முறைப்படி அணி நிர்வாகத்திடம் தெரிவித்து அணியில் இருந்து டேவிட் வில்லே விலகி நாடு திரும்புகிறார். ஏற்கனவே நெகிடி தொடரில் இருந்து விலக தற்போது இவரும் விலக சென்னை அணிக்கு இது இழப்பாக அமைந்துள்ளது.

Advertisement