இவங்க 2 பேர் எங்க அணியில் இருந்திருந்தா நாங்க ஜெயிச்சிருப்போம் – வார்னர் வேதனை

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது.

srhvsdc

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 50 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். மேலும் மற்றொரு துவக்க வீரர் என ஸ்டாய்னிஸ் 38 ரன்களையும் இறுதி நேரத்தில் 22 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் அதிரடியாக 42 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வில்லியம்சன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 33 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் டெல்லி அணி சார்பாக ரபாடா 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டாய்னிஸ் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ஸ்டாய்னிஸ் அறிவிக்கப்பட்டார்.

rabada

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட வார்னர் முக்கிய வீரர்கள் இருவரை இழந்தது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எங்கள் அணியின் கீ பிளேயர்களாகிய சஹா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியது எங்கள் அணியை இக்கட்டில் கொண்டு சென்றது. இருப்பினும் மீதமிருந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் இன்றைய நாளில் நாங்கள் வெற்றியை பெறமுடியவில்லை. எங்களது அணியின் ரசிகர்கள் மிகவும் சிறப்பாக எங்களை ஆதரித்தனர்.

Bhuvi 1

ஹைதராபாத் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது. ஹைதராபாத் அணி நிர்வாகம் மற்றும் உரிமையாளர் என அனைவரும் ஒரு குடும்பம் போல எங்களை அழைத்து வருகின்றனர். அடுத்த ஆண்டு நிச்சயம் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்றும் அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் நடைபெற வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement