இந்த தோல்வியை ஏத்துக்க முடில. பேட்டிங்கில் நாங்கள் செய்த இந்த சின்ன தவறு தான் எல்லாத்துக்கும் காரணம் – டேவிட் வார்னர்

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாசில் வெற்றி பெற்ற டேவிட் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள படிக்கல் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க விராட்கோலி 33 ரன்களை குவித்தார். அதன்பின்னர் மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க அதிரடி வீரரான மேக்ஸ்வெல் மட்டும் ஒரு பக்கம் தனியாக நின்று 41 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரி 59 ரன்கள் குவித்து போட்டியின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

maxwell

- Advertisement -

மேக்ஸ்வெல் என்ற தனி ஒருவரின் அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி துவக்கத்தில் சஹா விக்கெட்டை ஒரு ரன்னில் இழந்தாலும் வார்னர்(54) மற்றும் மணிஷ் பாண்டே(38)ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 16 ஓவர்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்த சன்ரைசர்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மீதமிருந்த 4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

குறிப்பாக சபாஷ் அகமது வீசிய 17வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை பெங்களூரு அணியின் பக்கம் கொண்டு வந்தார். பின்னர் இறுதி நேரத்தில் ரஷீத் கான் 9 பந்துகளில் 17 ரன்கள் அடித்து ரன் அவுட்டாக பரபரப்பான இந்த போட்டியில் 20வது ஓவரின் கடைசி பந்தில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஷாபாஸ் அகமது 2 ஓவர்கள் வீசிய 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதேபோன்று ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

shahbaz ahmed

இந்நிலையில் தாங்கள் பெற்ற இந்த எதிர்பாராத தோல்வி குறித்து பேட்டியளித்த சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி பெங்களூரு அணியை ரன் குவிக்க விடாமல் தடுத்தனர். மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி பெங்களூர் அணிக்காக ரன்களை சேர்த்தார். இந்த போட்டியில் நாங்கள் இறுதிவரை விளையாடி வெற்றி பெற்றிருக்க வேண்டும். செட்டான பேட்ஸ்மேன் இருவர் இறுதிவரை விளையாடி இருந்தால் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அதனை எங்கள் செய்ய தவறி விட்டோம். முறையான கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாடி இருக்கவேண்டும்.

siraj

ஆனால் நாங்கள் கிராஸ் பேட் ஷாட்களை விளையாடிவிட்டோம். சென்னை மைதானத்தில் இதுபோன்ற ஷாட்டுகளை விளையாடக்கூடாது. இந்த தோல்வியால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். இனிவரும் போட்டிகளில் இந்த தவறுகளை திருத்திக்கொண்டு செயல்படுவோம் இங்கு இன்றும் 3 போட்டிகள் உள்ளதால் இந்த மைதானத்தை புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் விளையாட நாங்கள் முயற்சிப்போம் இன்று வார்னர் வேதனையுடன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement