சி.எஸ்.கே அணிக்கு எதிரா தப்பு கணக்கு போட்டுட்டேன். அதுவே தோல்விக்கு காரணம் – வார்னர் ஓபன் டாக்

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 29 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான தன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

cskvssrh

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், ராயுடு 41 ரன்களும் குவித்தனர். துவக்க வீரராக களமிறங்கிய சாம் கரன் 31 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி சார்பாக வில்லியம்சன் மட்டும் சிறப்பாக விளையாடி 57 ரன்களை குவித்தார். ஜடேஜா பேட்டிங்கில் 10 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் குவித்தார். பவுலிங்கிலும் 3 ஓவர் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அதனால் அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : இந்த மைதானம் கொஞ்சம் ஸ்லோ விக்கெட்டாக இருந்ததாக கருதுகிறேன். இந்த போட்டியில் நாங்கள் இன்னொரு பேட்ஸ்மனுடன் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனாலும் இந்த போட்டியை இறுதிவரை முயற்சி செய்தோம். இது போன்ற பெரிய மைதானங்களில் விளையாடுவது எளிதானதல்ல.

- Advertisement -

நாங்கள் இன்னும் சில பகுதிகளை பலப்படுத்த வேண்டிய அவசியம் எங்களிடம் உள்ளது. 160 ரன்கள் என்பது நாங்கள் எட்டக்கூடிய இலக்கை தான் என்று நினைத்தோம். ஆனால் அதற்கு மேல் செல்லும் சில ரன்கள் போட்டியை கடினமாக்கி விடுகின்றன. 6-7 பவுலர்களுக்கு எதிராக பேட்டிங் செய்வது கடினம் தான். பவர் பிளே ஓவர்கள் எப்போதும் சவாலான ஒன்று. அதில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

இனி வரும் போட்டிகளில் அதனை நாங்கள் செய்ய முயற்சிப்போம். புள்ளிப் பட்டியலில் கீழே உள்ளதால் இனிவரும் போட்டிகளில் அனைத்து சிறப்பான அணிகளையும் வீழ்த்த வேண்டும். அப்போது மட்டுமே நாங்கள் முன்னேற முடியும். இன்னும் சில நாட்களில் சிறப்பான அணிகளுடன் மோத இருக்கிறோம். அந்த சவாலுக்கு நானும் எங்களது அணியும் தயாராக வேண்டும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement