சேவாக் மற்றும் ஏ.பி.டி கிட்ட பேசிட்டு தான் இந்த முடிவை எடுத்தேன். ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க இருக்கும் – டேவிட் வார்னர்

Warner
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் அந்த அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் அந்த அணிக்கு முக்கியமானவராக இருக்கிறார். தனது நாட்டு அணிக்கு ஆடுவது போக உலகில் உள்ள அனைத்து டி20 கிரிக்கெட் லீக்கிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.

Warner

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து அனைத்து வகை போட்டிகளிலும் ஆடுவதால் குடும்பத்திற்கும், வெளி உலகுக்கும் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் டேவிட் வார்னர் . இதன் காரணமாக டி20 போட்டிகளில் சீக்கிரம் அவர் ஓய்வு எடுக்கப் போவதாக தெரிகிறது . இது குறித்து பேசிய டேவிட் வார்னர் கூறியதாவது :

டி20 சர்வதேச போட்டியில் விளையாடுவது பற்றி நான் யோசிக்க வேண்டும் . அடுத்தடுத்து இரண்டு உலகக் கோப்பையில் வேறு உள்ளன. இதன் காரணமாக டி20 கிரிக்கெட் கைவிட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் ஆடுவது சற்று சுமையாக உள்ளது. விரேந்திர சேவாக், ஏபி டிவில்லியர்ஸ் போன்றவர்களிடம் இது பற்றிய ஆலோசனை கேட்டேன் . ஏன் என்றால் 3 வகையான போட்டிகளிலும் ஆடுவது பெரிய சவால்.

Warner-1

எனக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் . எனது வாழ்க்கை சீரான முறையில் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதன் காரணமாக இவ்வாறு ஒரு முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் வார்னர். இவ்வாறு ஆலோசனை கேட்டு உள்ள டேவிட் வார்னர் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் டி20 போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவிப்பார் என்று தெரிகிறது.

Advertisement