ஜெயிக்க போறோம்னு தெரிஞ்சி வார்னர் செய்த வினோத செயல் – நிச்சயம் ரசிகர்களுக்கு இது புதுசு தான்

Warner-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsDC

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 34 பந்துகளில் 66 ரன்களையும், சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்தனர். அதன் பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 ரன்களையும், ரஹானே 26 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக ரசித் கான் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக விருத்திமான் சஹா தேர்வானார்.

Saha 2

இந்நிலையில் இந்த போட்டியின் போது பன்னிரண்டாவது ஓவரை வீசிய விஜய்சங்கர் இடது காலில் தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக முதல் 5 பந்துகளை வீசி விட்டு கடைசி பந்தை வீசாமல் மைதானத்தில் இருந்து சென்றுவிட்டார். அப்போதே சன் ரைசர்ஸ் அணியின் வெற்றி முழுமையாக உறுதி ஆகி இருந்தது. இதனால் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத அந்த நேரத்தில் திடீரென அந்த ஒரு பந்தை வீசுவதற்காக பவுலிங் செய்ய வந்தார் கேப்டன் வார்னர்.

srh

பொதுவாக வார்னர் பவுலிங் செய்து பார்த்திராத ரசிகர்கள் அவரது பவுலிங்கை பார்த்து ரசித்தனர். முதல் பந்தை வீச இருந்த அவர் முதலில் வைடு வீச அதன் பிறகு மீண்டும் சரியாக வீசி ஒரு ரன்னை விட்டுக் கொடுத்து சென்றார். வார்னர் பந்து வீசியது நேற்றைய போட்டியில் நடந்த வினோத நிகழ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement