நான் இருக்கிறேன். கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்த முறை ஜெயிக்கும் – சவால் விட்ட ஆர்.சி.பி வீரர்

Steyn-1
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2020 ஐ.பி.எல் கோப்பைக்கான வீரர்களின் ஏலம் நேற்று முன்தினம் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

RCB

- Advertisement -

அதன்படி இந்த வருட ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் தேர்வில் பெங்களூர் ராயல்ஸ் அணியும் கலந்து கொண்டு சிறப்பான வீரர்களை தேர்வு செய்தது. அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஆரோன் பின்ச் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் ஆகியோரை தேர்வு செய்தது.

இம்முறை சரியான வீரர்களை தேர்வு செய்துள்ள பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் ஒருசிலர் கூறிவரும் இந்நிலையில் தற்போது ஆர்சிபி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டரில் பதில் அளித்தார். அதில் கோலியின் தலைமையிலான பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா ? என்று ரசிகர்கள் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்டெயின் : நான் இருக்கிறேன் நிச்சயம் பெங்களூர் அணி கைப்பற்றும் என்று அவர் பதிலளித்துள்ளார்.

Steyn

மேலும் அவர் கூறிய கருத்துக்களில் இம்முறை பெங்களூர் அணி பலமான பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்றும், பல வருடங்களாக கோப்பையை வெல்லும் என்று கருதப்படும் பெங்களூர் அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. ஆனால் இம்முறை அதனை நாங்கள் மாற்றுவோம் என்றும் ஸ்டெயின் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement