தீபக் சாகர் மற்றும் அவரது காதலிக்கு கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிய – சி.எஸ்.கே வீரர்கள்

Jaya
- Advertisement -

துபாய் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது பஞ்சாப் வீரர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது.

அதன் பின்னர் விளையாடிய பஞ்சாப் அணியானது கேப்டன் ராகுலின் அதிரடி ஆட்டம் காரணமாக 13 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 139 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இறுதிவரை களத்தில் நின்ற கே.எல் ராகுல் 42 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் அந்த போட்டி முடிந்து சென்னை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் துபாய் ஸ்டேடியத்தில் ரசிகர்களின் முன்னிலையில் தனது காதலிக்கு ப்ரப்போஸ் செய்து மோதிரம் ஒன்றையும் அணிவித்தார்.

அதுமட்டுமின்றி இந்த போட்டி முடிந்து சிஎஸ்கே வீரர்கள் ஹோட்டலுக்கு திரும்பும் போது அனைவரும் ஹோட்டல் வாசலில் நின்று தீபக் சாஹர் மற்றும் அவரது காதலி ஜெயா பரத்வாஜ் ஆகியோரை வரவேற்றனர். பின்னர் வீரர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் தீபக் சாஹர் மற்றும் அவரது காதலி ஆகியோர் ஹோட்டலின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரிய கேக்கை வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கேக் வெட்டிய பிறகு சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் தீபக் சாகரின் உடல் முழுவதும் கேக் பூசி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement