சென்னை அணி பிளே ஆஃப் செல்லுமா ? செல்லாதா ? – சி.எஸ்.கே அணியின் வெற்றி வாய்ப்பு ? – விவரம் இதோ

CSK-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 25 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது.

rcbvscsk

அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 52 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன்பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே அடித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ரன்களும், அறிமுக வீரர் ஜெகதீசன் 33 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

இதனால் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி பெற்ற இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சார்பாக கிரிஸ் மோரிஸ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் மூன்று ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வானார்.

sundar 1

நேற்றைய போட்டியில் விளையாடிய சென்னை அணி பெற்ற தோல்வியின் மூலம் மொத்தம் ஏழு போட்டிகளை விளையாடியுள்ள சென்னை அணி 5 ஆவது தோல்வியாகும். வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அவர்களது பிளே ஆஃப் வாய்ப்பு தற்போது மங்கி உள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் மீதமுள்ள 7 போட்டிகளில் சிஎஸ்கே அணி ஐந்து போட்டிகளாவது வெற்றி பெற்றாக வேண்டும். இப்போது இருக்கும் சிஎஸ்கே அணியை பொருத்தமட்டில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துமே சொதப்பி வருவதால் அவர்கள் இந்த வருட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிரமம் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு இதே போன்ற நிலைமையில் இருந்து சிஎஸ்கே அணி மீண்டெழுந்து கோப்பையை கைப்பற்றியது அதேபோல் நிகழுமா ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அப்போது இருந்த அணி வேறு. இப்போது இருக்கும் அணி வேறு என்றும் நிச்சயம் சிஎஸ்கே பிளே ஆப் முன்னேற வாய்ப்பில்லை என்றும் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement