தோனியின் புதிய புகைப்படத்தை பதிவிட்டு தெரிவிக்கவிட்ட சி.எஸ்.கே – வைரலாகும் புகைப்படம்

msdhoni
- Advertisement -

இந்த ஆண்டு 13 ஆவது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் மார்ச் 29ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி இந்த தொடருக்காக தற்போது சென்னையில் வந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் தோனியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே சென்னை ரசிகர்கள் அனைவரும் தோனி எப்பொழுது விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தோனியின் புகைப்படத்தை வெளியிட்டதால் தற்போது ரசிகர்கள் இன்னும் ஆரவாரத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

முதல் போட்டியாக சென்னை அணியும், மும்பை அணியும் 29ஆம் தேதி இரவு 8 மணிக்கு வான்கடே மைதானத்தில் மோத உள்ளது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தோற்ற சென்னை அணி தற்போது இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியில் பல நாட்களாக விளையாடாத தோனியை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த புகைப்படமானது வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் மார்ச் ஒன்றாம் தேதி சென்னைக்கு வந்து தோனி பயிற்சி மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் புதிய ஹேர் ஸ்டைலுடன் தோனி ஆட முடியுமா என்ற வார்த்தை இருக்கும் வீடியோ கேமை விளையாடுவது போன்ற புகைப்படத்தை சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement