சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை துவங்கிய பயிற்சி ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் மற்றும் மற்றும் அணியில் இடம்பெறாமல் இருக்கும் உள்ளூர் வீரர்களுக்கும் இடையே 20 ஓவர் பயிற்சி கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த போட்டியில் ராயுடு, ரெய்னா மற்றும் முரளி விஜய் போன்ற வீரர்கள் களமிறங்கி ஆடிவருகின்றனர்.
இந்த பயிற்சி போட்டியினை காண சென்னை அணியின் ரசிகர்கள் பல்லாயிர கணக்கில் திரண்டு வந்திருந்தனர், இன்றைய பிட்ச் ரிப்போர்ட்டின் படி இந்த பயிற்சி போட்டியினை காண சுமார் 12000 (பன்னிரெண்டாயிரம்) ரசிகர்கள் வந்திருந்தனர் என சி.எஸ்.கே அணி தனது அதிகாரபூர்வ டிவீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதோ அந்த ட்வீட் :
12,000 fans for an intra-squad practice game! Un-yellove-believable! #WhistlePodu #YelloveAgain at #AnbuDen ????????https://t.co/lsRM9xhTZW
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019
வரும் 23ஆம் தேதி நடைபெறஉள்ள முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று 11 மணி அளவில் துவங்கி 12 மணிவரை நடந்தது மேலும் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது ஒரே கவுண்டரில் டிக்கெட் விற்பனை நடந்ததால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது மேலும் தள்ளு முள்ளுடன் டிக்கெட் விற்பனை அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.