சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன. இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போட்டிக்காக ஏற்கனவே சென்னை அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீரர்கள் அவ்வப்போது விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இதுதொடர்பான செய்திகள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி ஹிட் அடித்து வருகின்றன.
தற்போது அதேபோன்று தினமும் புகைப்படம் மற்றும் விளம்பரங்கள் என பிசியாக இருக்கும் சென்னை வீரர்கள் இன்று மேலும் ஒரு புகைப்பட நிகழ்வில் கலந்து கொண்டனர். அதில் கலர் பேப்பர் மழையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இதோ அந்த புகைப்படம் :
And then just like the good old days – set the timer and join back the group for a pic! pic.twitter.com/b28B004Z0q
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019
இதனை கண்ட சென்னை ரசிகர்கள் அனைவரும் தங்களது சமூக வலை தளங்களில் இந்த புகைப்படத்தினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். முதல் போட்டிக்கான டிக்கெட் நேற்று விற்று தீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.