விமானத்திற்கு காத்திருந்து தரையில் அமர்ந்திருந்த சென்னை வீரர்கள் – விவரம் உள்ளே

2018csk
- Advertisement -

நேற்று துவங்கிய 12ஆவது ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து ஆடிய சென்னை அணி எளிமையாக சேசிங் செய்து பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

VK and MS

- Advertisement -

இந்த போட்டியை அடுத்து சென்னை அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க உள்ளது. இதற்காக சென்னை அணி இன்று விமானம் மூலம் டெல்லி செல்ல விமான நிலையம் சென்றது.

சென்னை விமான நிலையத்தில் சென்னை அணி வீரர்கள் விமானம் சிறிது தாமதமாக வரும் என்பதனால் விமான நிலைய தறியில் அமர்ந்து தங்களது நேரத்தை கழித்தனர். தோனி ஆசுவாசமாக காலை நீட்டியபடி அமர்ந்து கொண்டிருந்தார்.

இந்த புகைப்படத்தினை சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் வெளியான சில நிமிடத்திலேயே இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement