எல்லோருக்கும் முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே வீரர்கள் – யார் யார் தெரியுமா ?

Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக நடைபெறாமல் இருந்தது. இருமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடர் தற்போது இந்தியாவில் அல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது என்று அதிகாரபூர்வமான தகவல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியது.

CskvsMi

- Advertisement -

மேலும் இந்தத்தொடர் செப்டம்பர் 26ஆம் தேதி துவங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் மேலும் வீரர்கள் எவ்வாறு தங்குவார்கள் போட்டி போட்டி அட்டவணை என்ன ? என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் பயிற்சியை தொடங்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணி வீரர்கள் சிலர் அனைவருக்கும் முன்பாக ஐக்கிய அமீரகம் சென்று பயிற்சியை தொடங்க உள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒருசிலர் சக வீரர்களுக்கும் முன்பாக அவர்கள் அங்கு செல்ல உள்ளனர்.

ஏனெனில் ஏற்கனவே ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருந்த காரணத்தினால் முன்கூட்டியே மார்ச் மாத துவக்கத்திலேயே சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர்களில் தோனி, ரெய்னா, ராயுடு போன்றோர் சென்னையில் வந்து பயிற்சியில் கலந்து கொண்டனர். மீண்டும் பாதிப்பு ஏற்பட்ட உடன் சொந்த ஊர்களுக்கு திரும்பிய அவர்கள் அங்கும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Dhoni

இந்நிலையில் தற்போது இந்த முக்கிய வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று முன்னதாகவே பயிற்சி மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதர அணி வீரர்கள் மற்றும் இதர சிஎஸ்கே வீரர்களும் அதன் பின்னரே பயிற்சியைத் துவங்குவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

Advertisement