சென்னை அணியில் இருந்து வெளியேறிய 5 வீரர்கள் இவர்கள் தான் – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட சி.எஸ்.கே

- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் மற்றும் வீரர்கள் மாற்றம் ஆகியவை தற்போது வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. எனவே அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கும் வீரர்களின் பட்டியலை அறிவிக்கவேண்டும்.

அதன்படி தற்போது சென்னை அணி நீக்கப்படும் 5 வீரர்கள் கொண்ட பட்டியலை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. சைதன்யா பிஷ்நோய், சாம் பில்லிங்ஸ், துரு சோரே, டேவிட் வில்லி மற்றும் மோகித் சர்மா ஆகிய 5 வீரர்களை சென்னை அணி விடுவித்தது. இதோ சென்னை அணியின் ட்விட்டர் பதிவு :

மேலும் சிறப்பாக விளையாடாமல் இருக்கும் கேதார் ஜாதவ் அணியிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் தோனியின் மிக நம்பிக்கையான வீரர்களில் ஒருவர் என்பதனால் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement